YouTurn

ஆந்திராவில் நடைபெற்ற சம்பவத்தை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக பரப்பும் அதிமுகவினர்!

ஆந்திராவில் நடைபெற்ற சம்பவத்தை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக பரப்பும் அதிமுகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் சாப்பிட முடியாமல் மாணவர்கள் உணவை குப்பைத் தொட்டியில் வீசியப்போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாட்டில் உள்ள அரசு நடந்தது போல் தவறாக பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

Ohh... ஸ்டாலின் ஆட்சியில் 

இது தான் காலை உணவு திட்டமா..

image.png

Archived Link

விரிவான விளக்கம்

காலை உணவு திட்டம் குறித்து பல்வேறு அவதூறுகள் பரவி வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளி குழந்தைகள் உணவை குப்பையில் கொட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இது தான் திமுக ஆட்சியின் காலை உணவு திட்டம் என்று அதிமுகவினர் பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Komedy King Kavi என்ற ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பக்கத்தில், மார்ச் 15, 2026 அன்று Mid day meals என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து keywords மூலம் பரவி வரும் இந்த வீடியோ குறித்து தேடினோம். அப்போது தெலுங்கு ஊடகமான BNS Media ஊடகத்தில் ”Students throw away substandard food at Govt school in NTR district” என்ற தலைப்பில் மார்ச் 11,2026 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. 

image.png


அதில் ஆந்திரா மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேவுனி செருவிலுள்ள எம்பிபி பள்ளியில், ”டொக்கா சீதம்மா மதிய உணவு திட்டம்” (Dokka Seethamma midday meal scheme) தரம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகத் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம் சாட்டியுள்ளனர். உணவைச் சாப்பிட இயலாத நிலையில், மாணவர்கள் அதனைக் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிய போது, ஆந்திராவை ஆளும் கட்சியான தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலாளர் Lokesh Nara, தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார். அதில் இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், உணவு நிறுவனம் மாற்றப்பட்டதாகவும், தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், பரவி வரும் வீடியோ ஆந்திரா மாநிலத்தில் எடுக்கப்பட்டது. இதை திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம் என்று குறிப்பிட்டு அதிமுகவினர் தவறாக பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க