YouTurn

நிதிஷ்குமாரை கன்னத்தில் அறைந்த இளைஞர் எனப் பரவும் பழைய வீடியோ!

நிதிஷ்குமாரை கன்னத்தில் அறைந்த இளைஞர் எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

அன்று பிரதமர் மோடி, இன்று நிதிஷ்குமார் தாக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

இன்று பல்டி பாபு நித்திஷ் குமாருக்கு கன்னத்தில் ஒரு அறை விழுந்து விட்டது. மாற்றம் வேகமாகத் தான் நடக்கிறது..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

கடந்த 2022ஆம் ஆண்டில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு இந்தியா கூட்டணியுடன் கைகோர்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதுவரை அவர் பலமுறை கூட்டணி தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலமுறை கட்சித் தாவிய நிதிஷ் குமாரை, இளைஞர் ஒருவர் பொதுநிகழ்ச்சி ஒன்றில் கன்னத்தில் அறைந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறியமுடிந்தது. 

ANI ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ "பீகார் | பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்க முயன்றார். பின்னர் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்" என்று குறிப்பிட்டு கடந்த 2022 மார்ச் 27 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இதே போன்று 'Economic Times' கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதியன்று வெளியிட்டுள்ள செய்தியிலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு "பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சியின்போது ஒருவர் தாக்கினார்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. 

அதில், "பக்தியார்பூரில் தனது குழந்தைப் பருவத்தை கழித்த முதல்வர், அப்பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பீகார் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது. 

முடிவு:

நம் தேடலில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை கன்னத்தில் அறைந்த இளைஞர் எனப் பரவும் வீடியோ, 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.