யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிகாரில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் காணொளியை தவறுதலாக தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி பரப்பி வருகின்றனர்
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிகாரில் அமோக வெற்றியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. பிகார் தேர்தல் முடிவையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவுக்கு எதிரான பரவலான போராட்டங்களை சித்தரிக்கும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது, பிகார் தேர்தல் ஆணையரின் வீட்டை மக்கள் முற்றுகையிடும் காட்சி என்று கூறி 17 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோவில் தடுப்பு சுவரை மீறி பொதுமக்கள் உள்ளே நுழைவது போன்ற காட்சிகளைத் தெளிவகாக் காண முடிகிறது.
பீஹாரில் உள்ள மாநில தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட பீஹார் மக்கள் 🔥
ஜனநாயகம் மலரட்டும் 🙏pic.twitter.com/QcV4ti5DAG
இதே போன்று, பரவி வரும் வீடியோ “பிகார் தேர்தல் முடிவுக்கு பின்பு, எதிர்க்கட்சியான RJD ஆதரவாளர்கள் 'வாக்கு திருட்டுக்கு' எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று குறிப்பிட்டும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ச்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே சமூக ஊடகங்களில் “RJD“ என்று குறிப்பிட்டு இந்த வீடியோ வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

மேலும் இதே இடத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ, பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் போஜ்புரி பாடகரும் நடிகருமான கேசரி லால் யாதவின் தேர்தல் பேரணியின் காணொளி என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
எனவே பரவி வரும் வீடியோவில் உள்ள இடம் குறித்து “Google Map”-ல் ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், பீகாரில் அமைந்துள்ள "காங்கிரைதா உயர்நிலைப் பள்ளி" இது என்பதை அறிய முடிந்தது.
இந்நிலையில், காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோவை, பீகாரில் தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். மேலும் பரவி வரும் வீடியோ பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது.
முடிவு:
நம் தேடலில், பீகாரில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் காணொளியை தவறுதலாக தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.