யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், இரு இஸ்லாமியர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்குவதையும் காண முடிகிறது.
பரவிய செய்தி
திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
விரிவான விளக்கம்
மகாராஷ்டிராவில் ஒளரங்சீப் கல்லறை தொடர்பாக இந்துத்துவா அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 17) நாக்பூரில் போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து, வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், இரு இஸ்லாமியர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்குவதையும் காண முடிகிறது.
Students coming out of Masjid after offering namaz were beaten by police in Nagpur on Monday .😡
#NagpurViolence #NagpurRiots pic.twitter.com/J3pFO7deYq
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2022-ல் இருந்தே இவ்வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
எனவே இது குறித்து மேலும் தேடியதில், Maktoob யூடியூப் பக்கத்தில், “மத்தியப் பிரதேசத்தில் ராம நவமி வன்முறை கொண்டாட்டங்களைத் தொடர்ந்து காவல்துறையினர் முஸ்லிம் ஆண்களைத் தாக்குகின்றனர்“ என்று குறிப்பிட்டு இதே வீடியோ கடந்த 2022 ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதே போன்று, MP Tak ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும், கடந்த 2022 ஏப்ரல் 15 அன்று பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியின் மூலம், கடந்த 2022 ஏப்ரலில் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி பரவும் வீடியோ, கடந்த 2022 ஏப்ரலில் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.