
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X post link | Archive link
விரிவான விளக்கம்
அதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மருது சகோதரர்களின் புகைப்படங்களின் முன்பாக மரியாதை செலுத்தும் படத்தையும், மருது சகோதரர்கள் யார் என்பது குறித்தும் பதிவிட்டு சிரிக்கும் எமொஜியை இணைத்து பதிவிட்டு இருக்கிறார். இதை வைத்தே இழிப்படுத்தியதாகக் கூறி பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
கேடுகெட்ட திருட்டு திமுக ஆளும் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ ❓❓
யாரை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த விருது @mkstalin அவர்களே.
சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற "மருது சகோதரர்களை" இழிவுப்படுத்திய "பூங்கா கரடி" என்னும் #முஹம்மது_ஜுபயருக்கு விருது வழங்கிய ஸ்டாலின்.… pic.twitter.com/6DfHKJzWDK
— Drguruji bjp (@Drguruji_BJP) January 26, 2024
சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற "மருது சகோதரர்களை" இழிவுப்படுத்திய "பூங்கா கரடி" என்னும் முஹம்மது ஜுபயருக்கு விருது வழங்கிய ஸ்டாலின்.
முக்குலத்தோருக்கு எதிராக செயல்படும் திருட்டு திமுக எனும் தீய சக்திக்கு அழிவு உறுதி...#DMKFailsTN pic.twitter.com/eDnqpuiHx1
— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) January 26, 2024
உண்மை என்ன ?
மருது பாண்டிய சகோதரர்களை முகமது ஜூபைர் இழிவுப்படுத்தியதாகக் கூறி அவரது டிவீட் பதிவு தவறாக பரப்பப்படுகிறது. அந்த ட்வீட் பதிவுகள் கடந்த ஆண்டு கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக பாஜகவினரின் தவறான படங்களுக்கு எதிராக வெளியானவை.
2023 மார்ச் 11ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை திறப்பிற்காக வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் பொருட்டு மாண்டியாவில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்களில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா மகாத்வாரா என இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திப்பு சுல்தானுக்கு எதிராக உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா போராடியதாக பாஜகவினர் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா முற்றிலும் உருவாக்கப்பட்ட புனைவு கதை என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்போதைய கர்நாடகா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.
மேலும் படிக்க : உரி கவுடா, நஞ்சே கவுடா என மருது பாண்டியர்கள் படங்களைப் பயன்படுத்திய கர்நாடகா பாஜக !
அவ்வாறு பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்களில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா எனக் கூறி மருது பாண்டியர்களின் படத்தை தவறாக பயன்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக யூடர்ன் தரப்பிலும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
Later, Karnataka Minister & film producer Munirathna @MunirathnaMLA had announced that he wilk making a film on Vokkaliga chieftains Uri Gowda & Nanje Gowda. He claims that the movie was scripted by Higher Education minister Dr CN Ashwath Narayan. pic.twitter.com/TVQqzhK72q
— Mohammed Zubair (@zoo_bear) March 20, 2023
In an attempt to woo Vokkaliga voters in Karnataka, BJP leaders tried to rewrite history by using images/paintings of Maruthu Pandiyar brothers from Tamil Nadu and with claims that they were Uri Gowda and Nanje Gowda (fictitious characters) who killed Tipu Sultan. pic.twitter.com/EvCqaqtZe5
— Mohammed Zubair (@zoo_bear) March 20, 2023
அந்த பேனரின் படத்தை பாஜகவின் சி.டி.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவரின் பதிவைக் குறிப்பிட்டு ஜுபைர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் சி.டி.ரவி தவறான படத்தை பயன்படுத்தியதற்காகவே அவரைக் குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜி உடன் பதிவிட்டு இருப்பார். ஆனால், மருது சகோதரர்களை இழிவுப்படுத்தியதாக பாஜகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
முகமது ஜுபைர் மருது சகோதரர்களை இழிவுப்படுத்தியதாகப் பாஜகவினர் பரப்பும் தகவல் பொய்யானவை. அந்த பதிவு, 2023ல் கர்நாடகா பாஜகவினர் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா எனக் கூறி மருது பாண்டியர்களின் படத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக வெளியிட்ட பதிவை தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.