YouTurn

காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் அளித்ததாகப் பரப்பப்படும் பொய் !

காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் அளித்ததாகப் பரப்பப்படும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மோகன்தாஸ் காந்தியை 'மகாத்மா காந்தி' என்று  அழைக்க வைத்தது யார்? இந்திய குடிமக்கள் என்று நீங்கள் யூகித்திருந்தால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். இது  இன்னொரு பிரிட்டிஷ் மோசடியாகும். சாச்சா நேருவைப் போல ஏன் இவர் உச்சத்திற்கு உயர்த்தப்பட்டார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://twitter.com/lvr63/status/1477305484407304192

Archive link

இந்நிலையில், காந்தியை  ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

https://twitter.com/ramgeecrr/status/1611619517012258816

Archive link 

உண்மை என்ன ?

காந்தி முதன் முதலில் மகாத்மா என அழைக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். தேசிய கீதத்தை எழுதிய ரவீந்தரநாத் தாகூர் காந்திக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியதாகத் தகவல் கிடைத்தது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையதளத்தில் Now Prashant Kishor comes to Champaran, where Gandhi became Mahatma” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் காந்திக்கு மகாத்மா என்ற பட்டத்தினை தாகூர் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

mahatma gandhi

பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. 

1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது. 

ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  

[caption id="attachment_38814" align="aligncenter" width="600"]Ravishankar Shukla பண்டிட் ரவிசங்கர் சுக்லா[/caption]

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை 'மகாத்மா காந்தி' என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.



இவ்வாறாக இருப்பினும், டாக்டர்.பிரஞ்சிவன் மேத்தா என்பவர் கோபாலகிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தியை முதன் முதலில் மகாத்மா எனக் குறிப்பிட்டுள்ளதாக ‘தி பிரிண்ட்’ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 

1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு  பற்றியதே”  என்றுள்ளது. (மகாத்மா அண்ட் தி டாக்டர், எஸ்.ஆர்.மெஹ்ரோத்ரா, வக்கீல்ஸ், ஃபெஃபர் அண்ட் சைமன்ஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை, 2014, பக்கம் 28) " என இடம்பெற்று உள்ளது. 

மேலும் படிக்க : காந்தியை தவறாகச் சித்தரிக்கும் படங்கள்.

மேலும் படிக்க : காந்திச் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட அரியப் படமா ?

முடிவு : 

நம் தேடலில், காந்திக்கு மகாத்மா எனப் பட்டத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் வழங்கியதாகப் பரவும் தகவல் உண்மையல்ல. குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ரவீந்தரநாத் தாகூர்தான் காந்தியை முதன் முதலில் மகாத்மா என அழைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க