YouTurn

விஜய் பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

விஜய் பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

விஜய் பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

பரவிய செய்தி

41 பேர கொன்ன கொலைகார எமன் விஜயின் பிரச்சார பஸ் பறிமுதல். Great job TN government..



X Link:


விரிவான விளக்கம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது பரப்புரைக்காக பயன்படுத்திய பிரச்சார வாகனம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவாறு,  தவெக தலைவர் விஜய் தனது பரப்புரைக்காக பயன்படுத்திய பிரச்சார வாகனம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது செய்தி ஊடகங்களில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்தோம். ஆனால் எந்த செய்தியும் இது குறித்து வெளியிடப்படவில்லை. 



மேலும் பரவி வரும் புகைப்படத்தின் கீழ் வலது ஓரத்தில் “Gemini” AI LOGO இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது. இது குறித்து “Gemini” தளத்தில் ஆய்வு செய்ததில், பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பதை உறுதி செய்தது. 


முடிவு: 


நம் தேடலில், விஜய் தனது பரப்புரைக்காக பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.