YouTurn

தாம்பரம் மாநகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதா? உண்மை என்ன?

தாம்பரம் மாநகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2023 ஆம் ஆண்டு முதல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மொத்த நாய்கள் - 9,743, அதற்கான மொத்த செலவினம் ரூ.1,44,83,750/- என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் உறுதி செய்துள்ளார்.

பரவிய செய்தி

2024-2025 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியில் Animal birth controlக்கு 68 கோடியே 99 லட்சத்து 68 ஆயிரத்து நூற்றி முப்பத்தி இரண்டு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் பிறப்பை குறைக்க ரூ.68,99,68,132 செலவு செய்ததாக தாம்பரம் மாநகராட்சி ஒன்றிய அரசிற்கு கொடுத்த அறிக்கை.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் அப்பதிவுகளில், “நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் பிறப்பை குறைக்க ரூ.68,99,68,132 செலவு செய்ததாக தாம்பரம் மாநகராட்சி ஒன்றிய அரசிற்கு கொடுத்த அறிக்கை இது“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில்,  2024-2025 ஆம் நிதியாண்டிற்காக தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டிருந்த “Trial Balance” அறிக்கை கிடைத்தது. 


அந்த அறிக்கையில் விலங்குகளுக்கான இனக்கட்டுப்பாடு (Animal Birth Control) என்று குறிப்பிட்டு, 55,20,173 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுகள் நீக்கம் (Garbage Clearance) என்று குறிப்பிட்டே ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்நிலையில் உண்மையான அறிக்கையின் புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பியுள்ளனர். மேலும் இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர், “2023 ஆம் ஆண்டு முதல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மொத்த நாய்கள் - 9,743, அதற்கான மொத்த செலவினம் ரூ.1,44,83,750/- செலவிடப்பட்டது” என்றும் கூறியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 



மேலும், இது குறித்த விளக்கத்தில், “ 2023-ம் ஆண்டில் பாரதிபுரம், அனகாபுத்தூர், குண்டுமேடு பகுதிகளில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் 1,782 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு ரூ.1,650. (பிடிப்பு செலவு உட்பட) மொத்த செலவினம் ரூ.29,40,300/- ஆகும். 2024-ம் ஆண்டில் 2,557 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு ரூ.1,450/- (நாய் பிடிப்பவர் செலவு அல்லாது) மொத்த செலவினம் ரூ.37,07,650 ஆகும். 2025-ம் ஆண்டில் 5,404 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு ரூ.1,450/- (நாய் பிடிப்பவர் செலவு அல்லாது) செலவினம் ரூ.78,35,800/- ஆகும்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். 


முடிவு: 


நம் தேடலில், தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க