YouTurn

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமியா? உண்மை என்ன?

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமியா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி திமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்தே கருணாநிதி அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரவிய செய்தி

உண்மையில் எடப்பாடி மனித நேயம் உள்ள நல்ல மனிதர் அதனால தான் உங்கப்பா கடல்கறையில் தூங்கி கொண்டு இருக்கிறார்!

image.png

X Link / Archive Link

விரிவான விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மனிதநேயத்தால் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது  என்று பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் எடப்பாடி பழனிசாமி தான் இதற்கு அனுமதி அளித்தாரா என்பது குறித்து தேடினோம். அப்போது விகடன் ஊடகத்தில் ஆகஸ்ட் 08, 2018 அன்று ”கருணாநிதி மறைவு முதல்... மெரினாவில் அனுமதி மறுப்பு வரை... நள்ளிரவில் நடந்தது என்ன ?” என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் கருணாநிதி அவர்களின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுகவினர் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அப்போதைய அதிமுக அரசு அதற்கு அனுமதி மறுத்தது. சர்தார் படேல் சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக, காந்தி மண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, BBC ஊடகத்தில் “கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கீடு: தமிழக அரசு, திமுக தரப்பு வாதங்கள் என்ன?” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி திமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்தே கருணாநிதி அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்று கூறப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மறைத்து எடப்பாடி பழனிச்சாமியின் மனிதநேயத்தால் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது என்று தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க