யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடிகர் விஜய் ரூ. 5 கோடி வழங்கியது பற்றிய செய்தியை Edit செய்து ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கியதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரியலூரில் பிரச்சார சுற்றுப் பயணத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘“என்ன பெரிய பணம்? வேணும் என்கிற அளவுக்கு பாத்தாச்சு. அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்கணும் என்று அவசியமில்லை” என்று பேசினார்.
இந்நிலையில் பணம் பெரிய விஷயமில்லை என்று சொல்லும் விஜய், கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, நிவாரண நிதிக்காக ரூ. 5 ஆயிரம் மட்டுமே அளித்தார் என்று பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமன் உள்ளிட்டோரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இந்த கூற்றுக்கு ஆதாரமாக ஒரு செய்தித்தாளில் வெளியான செய்தியின் புகைப்படத்தையும் பரப்பிவருகிறார்கள்.

பணம் என்ன சார் பணம்...
~தளபதி விஜய் 🙏 pic.twitter.com/CrtoRcZPgS
உண்மை என்ன?
இது குறித்து இணையத்தில் தேடியதில், ‘Business of Cinema’ என்ற இணையத்தளத்தில் 2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின் போது தமிழ் நடிகர்கள் நிவாரண நிதி வழங்கியது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.

அதில் நடிகர் விஜய் ரூ. 5 கோடி நிவாரண நிதியாக வழங்கியதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக மீட்புப் பணி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவைக் காணமுடிந்தது. அதில், சென்னை வெள்ளத்தில் நடிகர்கள் நிவாரண நிதி கொடுத்தது பற்றிய செய்தித் துண்டின் புகைப்படம் இருந்தது. அதில், ரஜினி ரூ. 10 லட்சமும், ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியும், விஜய் ரூ. 5 கோடியும் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திப் புகைப்படத்தில் உள்ள ரூ. 5 கோடி என்பதை ரூ. 5 ஆயிரம் என்று Edit செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.
முடிவு:
2015ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நிவாரண நிதியாக விஜய் ரூ. 5 கோடி வழங்கியது பற்றிய செய்தியை Edit செய்து ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கியதாக பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் தவறாக பரப்புகிறார்கள்.

