YouTurn

தவெக தொண்டர்கள் கையில் விஜய் - த்ரிஷா புகைப்படம் போன்று எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

தவெக தொண்டர்கள் கையில் விஜய் - த்ரிஷா புகைப்படம் போன்று எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தவெக தொண்டர்கள் கையில் விஜய் - த்ரிஷா புகைப்படம் போன்று எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

பரவிய செய்தி

அண்ணே நீ குசும்பு காரன் @TVKVijayHQ 


 

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 20, 2025 அன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பிரச்சாரத்தின்போது, விஜய் - த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் வந்ததாக NewsTamil 24x7 ஊடகம் நியூஸ் கார்ட் வெளியிட்டதாக இணையத்தில் பரவி வருகிறது. 


#சனியின்_பயணம் pic.twitter.com/kUkDVL01xP

— தனி ஒருவன் 🔥🔥🙋🏻‍♀️⚔️ (@Thaniorvann) September 20, 2025

 

உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து NewsTamil 24x7 ஊடகத்தின் ஆசிரியர் குழுவிடம்  தொடர்புக்கொண்டு கேட்டப்போது, இது எங்களது பெயரில் பரப்பப்படும் போலியான செய்தி என்றும், இப்படியான நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதையும் உறுதிச் செய்தனர். 

 

இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து தேடியப் போது, NewsTamil 24x7 ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் “நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-விஜயகாந்த் புகைப்படத்துடன் தொண்டர்கள்!” என்று குறிப்பிட்டு செப்டம்பர் 20, 2025 அன்று ஒரு நியூஸ் கார்ட் வெளியாகியிருந்தது. அதில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தையே தவெக நாகை தொண்டர்கள் கையில் பிடித்துள்ளனர். இதை எடிட் செய்து, விஜய் – த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் உள்ளது போன்று வதந்தி பரப்புகின்றனர். 


 

முடிவு: 


கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், விஜய் மற்றும் விஜயகாந்த் ஒன்றாக இருப்பது போன்று தொண்டர்கள் கையில் பிடித்திருந்த புகைப்படத்தை, விஜய் – த்ரிஷா இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.