YouTurn

சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!

சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

இது பெரியார் மண் இல்லை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண், மதுரை

X Link | Archived Link

விரிவான விளக்கம்

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


இந்நிலையில் பேருந்துகளும், வேன்களும் வரிசையாக நின்று இருப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இது பெரியார் மண் இல்லை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண் என்று குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவின் keyframeகளை வைத்து தேடி பார்த்தோம். அப்போது mani_pennagaramm என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் மே 13 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் வன்னியர் சங்கம் மாநாடு 250 ஏக்கரில் நடைபெற்றதாகவும், அதில் ஏழு ஏக்கர் பிரம்மாண்ட முறையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் இது குறித்து தேடி போது, பரவி வரும் வீடியோவை tag செய்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அதில் இது பெரியார் மண்ணும் இல்லை, முத்துராமலிங்கம் மண்ணும் இல்லை என்றும், சித்திரை முழுநிலவு மாநாட்டின் போது நான் எடுத்த வீடியோ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முடிவு : 

பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ, மதுரை முருகன் மாநாட்டில் எடுத்தது போல் பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க