யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் உள்ள ஹஸ்பானியா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தை, இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ.
பரவிய செய்தி
இது எந்த ஊர் என்று தெரியவில்லை....கருணை இல்லங்கள் ஆயிரம் இருந்தும் கருணை இல்லாத காட்டுமிராண்டிகளின் களியாட்டங்கள்..Send all groups please.... These cruel dogs must be punished

விரிவான விளக்கம்
இந்தியாவில் மூன்று நபர்கள் சேர்ந்து ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சிகளை பதிவிட்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது எந்த ஊர் என்று தெரியவில்லை....கருணை இல்லங்கள் ஆயிரம் இருந்தும் கருணை இல்லாத காட்டுமிராண்டிகளின் களியாட்டங்கள்..😭😭😭Send all groups please.... These cruel dogs must be punished 😥 pic.twitter.com/S90bTIpG6L
உண்மை என்ன?
பரவி வரும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது வங்கதேச ஊடகமான dainikbartabd ஊடகத்தில், ”சாந்தியாவில் மகனும் மருமகளும் தாயைக் கொல்ல முயற்சிக்கும் வீடியோ வைரலாகி, 5 பேர் கைது செய்யப்பட்டனர்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 30 அன்று பரவி வரும் வீடியோவின் screenshotகளுடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வங்கதேசத்தின் பப்னா மாவட்டத்தில் சாந்தியா உபசிலா பகுதியில் உள்ள ராமச்சந்திரபூர் கிராமத்தில் தாயை அடித்த சம்பவம் பேஸ்புக்கில் வைரலானதை அடுத்து, மகன் மற்றும் மருமகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடியப் போது, more news bd ஊடகப்பக்கத்தில் ”மருமகள் மாமியாரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகிறது: மகனுடன் 5 பேர் கைது” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் பப்னாவின் சாந்தியாவில் 75 வயதான காஞ்சன் கதுன், குடும்ப தகராறில் தனது சொந்த மகனாலும், மருமகளாலும் இரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டதாகும், இதையடுத்து ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு மகன் நஸ்ருல் இஸ்லாம், மருமகள் சோனாலி கதுன் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள ஹஸ்பானியா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தை, இந்தியாவில் வயதான பெண்மணி ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவது போன்று தவறாக திரித்துப் பரப்புவது தெரியவந்தது.