YouTurn

முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலில் நிற்போம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களின் அடிப்படையே பதவி அல்ல. பொறுப்பு தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்” என்றே பேசியுள்ளார்.

பரவிய செய்தி

Stalin Model Core 

உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும்.

வாழ்த்துகள் வாழ்த்துகள் @mkstalin!

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுவது போன்றொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராகினோம் என்று அவர் பேசியதாக இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது சன் நியூஸ் ஊடகத்தின் யூடியூப் shorts பக்கத்தில் முதலமைச்சர் பேசிய வீடியோ வெளியாகியிருந்தது. அதில் ”அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயாராகும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல. பொறுப்பு தான். அதிகாரம் சாமானியனுக்காக போராடுவது” என்றே அவர் பேசியிருந்தார். இதை தான் எடிட் செய்து திரித்து பரப்புகின்றனர். 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, இந்து தமிழ் ஊடகத்தில் செப்டம்பர் 15 அன்று, “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை! - ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு” என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர, அவர்​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்​கும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் சென்​னை​யில் தொடங்கி வைத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் முதலமைச்சர் பேசியது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அதை வைத்து பார்க்கும் போது, முதலமைச்சர் பேசியதை எடிட் செய்து பரப்புவது தெரியவந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய வீடியோவின் ஒரு சிறு பகுதியை மட்டும்  எடிட் செய்து தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க