YouTurn

தமிழ்நாட்டில் சாலை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

தமிழ்நாட்டில் சாலை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்து சமூக ஆர்வலர் சுந்தராஜன் புதுச்சேரியில் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை தமிழ்நாடு என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திறனற்ற திமுக அரசு பிரதான சாலையை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம்!

#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #திருட்டுதிமுக #ByeByeStalin

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ”குண்டும் குழியுமான சாலையில் தேங்கிய மழை நீர் - துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 19ஆம் தேதி Pondy Mirror என்ற புதுச்சேரியை சேர்ந்த ஊடகத்தின் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதை வைத்து keywords மூலம் வேறு ஏதேனும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். அப்போது “துணி துவைக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்” என்ற தலைப்பில் தினமலர் ஊடகத்தில் செய்தி  வெளியாகியிருந்தது. அதில் புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதனை கண்டித்து, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகம் அருகில் சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தரராஜன், சாலையில் குளம் போல நின்ற மழைநீரில், தனது ஆடைகளை கழற்றி துவைத்து போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் கலாட்டா ஊடகத்தில், புதுச்சேரியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் துணி துவைத்து காய வைத்த சமூக ஆர்வலர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சரி செய்ய நூதன போராட்டம் என்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

Facbook Link 


இதை மேலும் உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவில் அரசினர் மத்திய அமைச்சகம் என்று ஒரு அரசு அலுவலகத்தின் கட்டடம் தெரிந்தது. இதையடுத்து கூகுள் மேப்பில், புதுச்சேரி அரசினர் மத்திய அச்சகம் என்று டைப் செய்து தேடினோம். அப்போது புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்று இடத்தில் அந்த அலுவலகம் இருப்பது தெரியவந்தது. அதன் ஸ்ட்ரீட் வியூ பார்த்தபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இடமும், கூகுள் மேப்பில் பார்த்த இடமும் ஒன்றாக இருந்ததைக் காணமுடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில், இது புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்து சமூக ஆர்வலர் சுந்தராஜன் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது. இதை தமிழ்நாடு என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க