YouTurn

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கால்நடைகள் எனப் பரவும் AI வீடியோ!

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கால்நடைகள் எனப் பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பஞ்சாப் வெள்ளத்தில் ஆடு மாடுகள் அடித்து செல்லப்படுவதாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

பசுமாட்டை பாதுகாக்கிறோம் என்று முஸ்லிம்களை அடித்தே கொல்வார்கள் ஆரிய பார்ப்பன ஆர் எஸ் எஸ் காவி இந்துத்துவ தீவிரவாத கும்பல்... எருமை மாட்டையோ மற்ற பசு மாட்டையோ வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முன்வர மாட்டார்கள் அந்த சங்கிகள்... பஞ்சாப் வெள்ளம்...


image.png


Facebook Link

விரிவான விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், கழுத்தளவு வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான கால்நடைகள் (எருமை மாடுகள்) மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்து  செல்வது போன்ற 18 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமுக வலைத்தலப்பக்கங்களில் வைரலாப் பரவி வருகின்றது. 



உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோ தகவல் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது தொடர்பான செய்திகளோ தகவல்களோ ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.


இதனை தொடர்ந்து, பரவிவரும் வீடியோவில் இருப்பது போல கால்நடைகள் வெள்ளத்தில் மூழ்கியது போன்ற காட்சிகள் எடிட் செய்து உருவாக்கப்பட்டவையோ என்ற சந்தேகம் எழுந்தது.


எனவே இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் வீடியோவை 'Was It AI' இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 





இவற்றிலிருந்து பரவி வரும் வீடியோ முழுக்க முழுக்க AI  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.


இதற்கு முன்பும் இதேபோன்று AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ குறித்து ஆய்வு செய்து நம் யூடர்ன் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க: விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!

மேலும் படிக்க: செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மேலும் படிக்க: ‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!


முடிவு : 


நம் தேடலில் பஞ்சாப் வெள்ளத்தில் கால்நடைகள அடித்துச் செல்வதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ. இதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க