YouTurn

மக்களவை தேர்தலுக்காக அண்ணாமலையை சந்தித்த உதயநிதி எனப் பரவும் தவறான செய்தி!

மக்களவை தேர்தலுக்காக அண்ணாமலையை சந்தித்த உதயநிதி எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டம்மி அண்ணாமலைக்காக கோவையில் டம்மி வேட்பாளரை போடுவதற்காக பேக்கரி டீலிங் நடந்த போது..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2024 மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் தொடர்பாக சந்தித்து பேசியுள்ளதாகக் கூறி, அண்ணாமலை மற்றும் பாஜக கட்சியினருடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதையும், கடந்த 2022 இல் இருந்தே சமூக ஊடகங்களில் இது வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.



கடந்த 2022 ஜூலை 15 அன்று ABP Live தமிழ்நாடு, "”அப்பா எப்படி இருக்காரு?”: முதல்வர் உடல்நலன் குறித்து உதயநிதியிடம் நலம் விசாரித்த அண்ணாமலை..!" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்துள்ளார். இருவரும் அஞ்சலி செலுத்தியபின், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டுள்ளனர். அப்பொழுது அண்ணாமலை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதே போன்று IBC Tamilnadu பக்கத்திலும், கடந்த 2022 இல் இதே செய்தி குறிப்பிடப்பட்டு "உதயநிதி ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு..!" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பரவி வரும் புகைப்படம், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரான ஐசரி கணேஷின் தாயார் மறைவையடுத்து, அவரது வீட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சந்தித்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: மஞ்சும்மல் பாய்ஸ்’ படக் குழுவினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சந்தித்ததாகப் பரவும் பொய் !

முடிவு:

நம் தேடலில், மக்களவை தேர்தலுக்காக அண்ணாமலையை சந்தித்த உதயநிதி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க