YouTurn

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததா? உண்மை என்ன?

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2024ஆம் ஆண்டிலே ’Saint Gobain’ தமிழ்நாட்டில் 3400 கோடி முதலீடு செய்வது குறித்து தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

பரவிய செய்தி

தவெக ஆட்சி பொறுப்பேற்று கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். தற்போது Saint Gobain நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளது. 


image.png


X Link


விரிவான விளக்கம்

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, ’Saint Gobain’ நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்ததாக தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதனை மேற்கோள் காட்டி, தற்போது ‘Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளது என்ற தொனியில் ’Chennai Updates’ என்ற சமூக வலைத்தளப் பக்கம் பதிவிட்டுள்ளது. 



உண்மை என்ன?


’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இணையத்தில் தேடினோம். ‘AutoCar Professional’ என்ற தளத்தில் 2024 ஜனவரி மாதம் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 


image.png


அதன்படி, ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரியவருகிறது. இந்த 3400 கோடி முதலீடு செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் ’Saint Gobain’ நிறுவனத்தின் முதலீடு மொத்தமாக 8000 கோடியை எட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும், இது குறித்து தேடியபோது, ’Saint Gobain’ வலைத்தளத்திலே இதுபற்றிய தகவலைக் காணமுடிகிறது. 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்வதாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Acoustic Ceiling, Ceramics போன்ற கட்டுமான பொருட்களின் உற்பத்தியை நோக்கி இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 2024ஆம் ஆண்டிலே ’Saint Gobain’ தமிழ்நாட்டில் 3400 கோடி முதலீடு செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவருகிறது.


முடிவு:


தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளது என்ற தொனியில் ’Chennai Updates’ தவறாக பரப்பிவருகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க