YouTurn

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சின்னம் முடக்கப்பட்டிருக்கிறதா? விஜய் பரப்பும் பொய் தகவல்!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சின்னம் முடக்கப்பட்டிருக்கிறதா? விஜய் பரப்பும் பொய் தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு பூர்த்தி செய்யப்படாத காரணத்திற்காக தான் தவெகவின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பரவிய செய்தி

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். 


image.png


X Link

விரிவான விளக்கம்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தவெக கட்சியின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகிய இருவரின் வேட்புமனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. 


இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு தவெக ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளதாக கடந்த 19ஆம் தேதி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதில், ’எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தான் சுயட்சை வேட்பாளரை ஆதரிப்பதாகவும்’ குறிப்பிட்டிருக்கிறார் விஜய். 



உண்மை என்ன?


சேலம் எடப்பாடி தொகுதியில் தவெகவின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த செய்திகளைத் தேடினோம். இது குறித்து ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது.


image.png

அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளரின் வேட்புமனுவை அதே தொகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால்,  தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனுவை 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்தனர். இதன் காரணமாக அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரி உத்தரவிட்டார். 


இதே போல், வேட்புமனுவை 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்த காரணத்திற்காக தவெக மாற்று வேட்பாளர் நித்யாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதிலிருந்து, தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு பூர்த்தி செய்யப்படாத காரணத்திற்காக தான் அவர்களின் வேட்புமனுகள் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.


முடிவு:


இதனை மறைத்து, எடப்பாடி தொகுதியில் தவெக கட்சியின் சின்னம் முடக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க