YouTurn

செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதா தவெக அரசு?

செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதா தவெக அரசு?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகள் அளித்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பரவிய செய்தி

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகளை முதல்வர் விஜய் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.


image.png


X Link / Archive Link 


image.png


Link


விரிவான விளக்கம்

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு தொடங்கும் முன்பு கேமரா முன்னால்  I.G ரம்யா பாரதி உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் சிரித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், அந்த மூன்று போலீஸ் அதிகாரிகளை முதல்வர் விஜய் பணியிடை நீக்கம் உத்தரவுவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்கள் பரப்பப்படுகிறது. 




 உண்மை என்ன?


சமீபத்தில் தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். கடந்த மே 17ஆம் தேதியன்று ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.



அதில், மதுரையைச் சேர்ந்த வெள்ளைக் காளை என்ற  ரௌடியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகளை காவலர்கள் அளித்ததாகவும், இதன் காரணமாக மாரிமுத்து என்ற காவல் ஆய்வாளரும் செல்லத்துறை, திருமுருகன் ஆகிய காவலர்கள் உட்பட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிரித்தது தொடர்பான விவகாரத்தில் இந்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.


முடிவு:


நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகள் அளித்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை திரித்து செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க