YouTurn

விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கு பரிசுத் தொகையை திமுக அரசு குறைத்து கொடுப்பதாக தவெக ராஜ்மோகன் பரப்பும் பொய் செய்தி!

விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கு பரிசுத் தொகையை திமுக அரசு குறைத்து கொடுப்பதாக தவெக ராஜ்மோகன் பரப்பும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது குறித்து எந்தவொரு செய்தியும் எங்கும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகிய இருவருக்குமே ஊக்கத்தொகையாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

பரவிய செய்தி

விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடிப்போட்டிகளில் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் பரிசு, ஆனால் பெண்கள் வெற்றி பெற்றால் 5000 ரூபாய் பரிசு என்று உள்ளது - ராஜ்மோகன், தவெக 

image.png

Youtube Link

விரிவான விளக்கம்

விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடிப்போட்டிகளில் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் பரிசு, ஆனால் பெண்கள் வெற்றி பெற்றால் 5000 ரூபாய் பரிசு என்று உள்ளதாக தவெகவைச் சேர்ந்த ராஜ்மோகன் செய்தி ஒன்றை பரப்பி வருகிறார். 


உண்மை என்ன? 

முதலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது போன்று ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை தேடினோம். அப்போது போட்டி சார்ந்த செயல்பாட்டிற்கான உயரிய பண ஊக்கத்தொகை பட்டியலில், ராஜ்மோகன் கூறிய எந்த விதமான செய்தியும் அதில் இடம்பெறவில்லை. 

image.png


அதே போல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறும் அனைத்து ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்குமான பொருளாதார செலவையும் தமிழக அரசே கவனித்துக் கொள்கிறது என்ற கூடுதல் தகவலையும் அதில் பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து ராஜ்மோகன் கூறியது தொடர்பாக, ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ”ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள்: தலா ரூ.25 லட்சம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!” என்ற தலைப்பில் இந்து தமிழ் ஊடகத்தில் 26 அக்டோபர், 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகிய இருவருக்குமே ஊக்கத்தொகையாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடிப்போட்டிகளில் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் பரிசு, ஆனால் பெண்கள் வெற்றி பெற்றால் 5000 ரூபாய் பரிசு என்று உள்ளதாக தவெகவைச் சேர்ந்த ராஜ்மோகன் பரப்பும் செய்திகள் தவறானவை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க