யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2019ஆம் ஆண்டு மூடப்பட்ட ரேஷன் கடைகள் 2024ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
09/12/2025 அன்று புதுச்சேரியில் தவெக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘இந்தியாவிலே ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களில் இருப்பது போல் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய பொருட்கள் புதுச்சேரியிலும் சீராக வழங்கப்படவேண்டும்’ என்று பேசினார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்படுவது குறித்து இணையத்தில் தேடினோம். இது குறித்து ‘News Click’ செய்தித்தளத்தில் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதன்படி, ‘புதுச்சேரியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி நடந்தபோது, ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் அனுப்பும் முறையை கொண்டு வர முயற்சித்தார் இப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ஆனால் இதற்கு நாராயணசாமி அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் மீறி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அத்திட்டத்தை கொண்டு வந்தது பெரும் எதிர்ப்பிற்கு உள்ளானது’ என்பது தெரிய வருகிறது.
மேலும் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் 600 ரூபாயும் மஞ்சள் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் 300 ரூபாயும் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டதை என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் 15 மாதங்கள் வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ரேஷன் கடைகளை திறக்கவேண்டும் என்று கூறி புதுச்சேரி மக்கள் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
இதிலிருந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 6 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் செயல்படாமல் இருந்ததும் 2024ஆம் ஆண்டு அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் தெரியவருகிறது.
முடிவு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரேஷன் கடைகளே இல்லை என்று தவறான தகவலை தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.