YouTurn

முதல்வர் ஸ்டாலின் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை என்று பொய் பரப்பும் தவெக நிர்வாகி அருண்ராஜ்!

முதல்வர் ஸ்டாலின் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை என்று பொய் பரப்பும் தவெக நிர்வாகி அருண்ராஜ்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேசியது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

”கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை” - தவெக நிர்வாகி அருண்ராஜ்.

image.png

Youtube Link 

விரிவான விளக்கம்

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், டிசம்பர் 17 அன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது கட்சியின் தலைவர் இன்னும் செய்தியாளர்களை சந்திக்காததற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதல் அளித்த அருண்ராஜ், கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்று தெரிவித்தார். 


உண்மை என்ன? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது வரை செய்தியாளர்களை சந்திக்கவில்லையா என்பதை தேடினோம். அப்போது News18 Tamil Nadu ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு" என்ற தலைப்பில் டிசம்பர் 10, 2022 அன்று முதலமைச்சரின் முழு செய்தியாளர் சந்திப்பு வீடியோ வெளியாகியிருந்தது. அதில் பேசிய அவர், மாண்டஸ் புயலால் பாதிக்கும் மாவட்டங்களை அறிந்து, அந்த அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி பேசியுள்ளதாக தெரிவித்தார். 


அதே போல் 2023, 2024, 2025 என்று கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியுள்ளார். 


கடந்த நவம்பர் 28,2025 அன்று கூட "முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பிரஸ்மீட்" என்ற தலைப்பில் தந்தி டிவி ஊடகத்தில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்தித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


முடிவு: 

நம் தேடலில், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளr சந்திப்புகளில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதை தெரிந்து கொள்ளாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்று பொய்யான தகவலை தவெக நிர்வாகி அருண்ராஜ் பரப்புகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க