
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஒருவர் பல ஆண்டுகளாக ஒரே தொலைப்பேசி எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தவும் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசிடம் TRAI (Telecom Regulatory Authority of India) பரிந்துரை அளித்திருப்பதாகப் புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு உட்படப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


உண்மை என்ன?
ஊடகங்கள் இத்தகைய செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் தொலைப்பேசி எண்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது அதிகாரப் பூர்வ இணைய தளத்திலும் இது பற்றி செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘Revision of National Numbering Plan’ தொடர்பாகக் கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. TRAI இந்த அறிக்கை வெளியிட்டதற்கு பிறகு நியூஸ் 18 தமிழ்நாடு அவர்களது செய்தியை திருத்தியுள்ளது.

இவற்றிலிருந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
ஒருவர் பல ஆண்டுகளாக ஒரே தொலைப்பேசி எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தவும் கட்டணம் வசூலிக்க TRAI பரிந்துரை எனப் பரவும் செய்தி உண்மை அல்ல.


உண்மை என்ன?
ஊடகங்கள் இத்தகைய செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் தொலைப்பேசி எண்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.
— TRAI (@TRAI) June 14, 2024
மேலும் அவர்களது அதிகாரப் பூர்வ இணைய தளத்திலும் இது பற்றி செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘Revision of National Numbering Plan’ தொடர்பாகக் கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. TRAI இந்த அறிக்கை வெளியிட்டதற்கு பிறகு நியூஸ் 18 தமிழ்நாடு அவர்களது செய்தியை திருத்தியுள்ளது.

இவற்றிலிருந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
ஒருவர் பல ஆண்டுகளாக ஒரே தொலைப்பேசி எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்தவும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தவும் கட்டணம் வசூலிக்க TRAI பரிந்துரை எனப் பரவும் செய்தி உண்மை அல்ல.
