YouTurn

ஈரோடு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் திருவண்ணாமலையில் நிகழ்ந்த பழைய சம்பவம்!

ஈரோடு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் திருவண்ணாமலையில் நிகழ்ந்த பழைய சம்பவம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்ததை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக.. ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்..

image.png

X link

விரிவான விளக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த EVKS.இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

#ErodeEastByElection #DMKFailsTN pic.twitter.com/IVfvIPQjGl

— Political News 🔥 (@Mahi1987Mass) January 27, 2025

இந்த இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்திற்குச் சென்ற திமுக-வினரை அங்குள்ள மக்கள் விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் உள்ள வாகனத்தின் முன் பக்கத்தில் ‘கு.பிச்சாண்டி MLA’ என எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அறிய முடிந்தது. பிரச்சார வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரிலும் திருவண்ணாமலை என்கிற பெயர் தெரிவதைக் காணலாம்.

மேற்கொண்டு பரவும் விடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், இதே வீடியோ 2024, ஏப்ரல் மாதம் K.S.ராஜா என்ற பாஜக பொறுப்பாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 

https://www.instagram.com/p/C5fXQOWBnkT/

நாடாளுமன்றத் தேர்தல் 2024, ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை என்பவர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர். குறிப்பிட்டு இச்சம்பவம் திருவண்ணாமலையில் எங்கு நடந்தது என்கிற விவரம் தெரியவில்லை. தகவல் கிடைக்கும் பட்சத்தில் கூடுதல் தகவலாக இக்கட்டுரையில் இணைப்போம்.

முடிவு:

இவ்வீடியோவில் உள்ள சம்பவம் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. இதனை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…