
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்நிலையில் பலரும் இந்த புகைப்படம் உண்மையானது அல்ல, போட்டோசாப் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். மேலும் அதில், ஒரு புகைப்படத்தில் சாலையின் நடுவே பெரிகாட் மற்றும் சிக்னல் ஆகியவற்றுடன், ஒரு ஓரத்தில் ராம்கோ என்று எழுதப்பட்ட போர்டும் உள்ளது என வட்டமிட்டு குறிப்பிட்டு, இன்னொரு புகைப்படத்தில் அவை எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டு பரப்பி வருவதையும் காண முடிந்தது.
வெளியிடப்பட்ட இரண்டு புகைப்படத்திலும் நிறைய வித்தியாசம் உள்ளதே இதில் எது ஒரிஜினல் எது போலி @DMKITwing ? https://t.co/5Bk9lsAj6x pic.twitter.com/b1wjsfwRc6
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) December 20, 2023
1.பச்சை நிற வழிகாட்டி பலகை
2.மஞ்சள் நிற சிக்னல் கம்பம் சிக்னல் விளக்குகளுடன்
3.காவலர் நிழற்குடை
4.சென்டர் மீடியன் பேரிங்கார்ட்களுடன்
5.ஒருபக்கம் இருந்த சாலை
5 வித்தியாசங்கள் கண்டுபிடிச்சி விளையாடறீங்களா, இதுக்கு மாநில IT wing செயலாளர் பதவி, அமைச்சர், இதுக்கு முனைவர் பட்டம் த்து https://t.co/otg7ID2Wcl
— Rajasekaran, (@RajaSek86502826) December 20, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் மேப்பில் ஆய்வு செய்து பார்த்ததில், இவை திருநெல்வேலி ஜங்சன் பெரியார் பேருந்து நிலையம்(புதிய) அருகே அமைந்துள்ள சாலையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பதை அறிய முடிந்தது.

மேலும் வெள்ளம் ஏற்பட்ட போது அங்கு நிலைமை எவ்வாறு இருந்தது என்பது குறித்து தேடியதில், விகடன் கடந்த டிசம்பர் 18 அன்று வெளியிட்டிருந்த புகைப்படங்கள் கிடைத்தது. கீழ்காணும் படத்தில் பெயர் பலகை, சிக்னல் கம்பம், பெரிகார்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

எனவே திருநெல்வேலி ஜங்சன் புதிய பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை என்ன என்பதையும், வெள்ள நீர் வடிந்துவிட்டதா என்பதையும் அறிய யூடர்ன் தரப்பிலிருந்து கள புகைப்படங்களை எடுத்து ஆய்வு செய்து பார்த்தோம்.


அதில், திருநெல்வேலி ஜங்சன் புதிய பேருந்து நிலையத்தின் சாலையில், பெரிகாட் மற்றும் சிக்னல் ஆகியவை இன்றும் அமைந்துள்ளன என்பதையும், தற்போது அங்கு வெள்ளநீர் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர் என்பதையும் உறுதி செய்ய முடிந்தது.

அதே சமயம், சிக்னல் மற்றும் பெரிகாடைக் கடந்து பேருந்து நிலையத்திற்கு அருகே சென்று, zoom செய்து எடுக்கும் போது புகைப்படத்தில் சிக்னல் மற்றும் பெரிகாட் ஆகியவை நமக்கு பின்புறம் சென்று விட்டதால், அவை புகைப்படத்தில் Cover ஆகவில்லை என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் படிக்க: திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளம் எனத் தவறாகப் பரவும் மொராக்கோ வீடியோ !
முடிவு:
நம் தேடலில், 'நெல்லை பேருந்து நிலையம் அன்றும் இன்றும்' எனப் பரவி வரும் புகைப்படங்கள் போட்டோசாப் செய்யப்பட்டவை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், அவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பதையும் உறுதிசெய்ய முடிகிறது.
