YouTurn

தமிழ்நாட்டில் சாலையில் தேங்கிய நீரில் கைக்குழந்தை விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

தமிழ்நாட்டில் சாலையில் தேங்கிய நீரில் கைக்குழந்தை விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

திமுக ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் நிலைமை.


 

Link / Archive Link

விரிவான விளக்கம்

சாலையில் மழைநீர் தேங்கிக் கிடக்கும் நிலையில் வாகனங்கள் அதில் பயணிக்கின்றன. இரு சக்கர வாகனத்தில் ஆணுடன் வந்த பெண் ஒருவர், கைக்குழந்தையுடன் தேங்கி நிற்கும் நீரில் விழுகிறார். நீரில் விழுந்து பெண்ணுக்கும் குழந்தைக்கும் உதவி செய்ய சிலர் ஓடி வருகிறார்கள்.‌

 

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக தவெக கட்சியின் ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.



Link / Archive Link


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ramesh Tvk Papparapatti (@ramesh_tvk_papparapatti)


உண்மை என்ன?

 

பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘TOK Videos’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மேலும் இது குறித்து தேடியபோது, ‘WOW 360’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த சம்பவம் கராச்சி நகரத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேஸ்புக் பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டிருக்கிறது.


 

இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர் என்பது தெரியவருகிறது. இதில் கராச்சி நகரமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


 

இதிலிருந்து, இது பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகிறது.

 

முடிவு:

 

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கொண்டு, தமிழ்நாட்டில் சாலையில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.