‘சரக்கு பாட்டில் கேட்டு கதறிய மூதாட்டி’ எனப் பரவும் பழைய வீடியோ!
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பழைய காணொளி
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவும் வீடியோ கடந்த 2018-ல் எடுக்கப்பட்டது. இதை தற்போது நடந்த சம்பவம் போல் வாட்சாப் ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திமுக ஆட்சியில் தமிழகத்தில் இது எவ்வளவு முக்கியமான (தலையாய) பிரச்சனை..
Ad slot · factcheck-inline
விரிவான விளக்கம்
திருச்சி ராணுவ கேண்டினில் மது பாட்டில்கள் தட்டுப்பாட்டைக் கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் மறியல், மறியலின் போது ‘சரக்கு பாட்டில் கேட்டு கதறிய மூதாட்டி’ எனக் குறிப்பிட்டு 48 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வாட்சாப் உட்பட சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் வீடியோவை பலரும் "திமுக ஆட்சியில் தலையாயப் பிரச்சனை" எனக் குறிப்பிட்டு வைரலாகப் பரப்புவதையும் காண முடிகிறது.
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mohan Ji (@mohanji3874)
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2018 அக்டோபர் 30 அன்று பரவி வரும் வீடியோவை, “சரக்கு பாட்டில் கேட்டு கதறிய மூதாட்டி | Liquor and old lady issue” என்று குறிப்பிட்டு "தினமலர்" ஊடகம் தனது யூடியூப் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
மேலும் வீடியோவின் விளக்கத்தில், “திருச்சி ராணுவ கேண்டீனில் மதுபாட்டில்கள்தட்டுபாட்டை கண்டித்து, முன்னாள் ராணுவவீரர்களின் மறியல் நடைபெற்றது. மூன்று முறை வந்தும் சரக்கு கிடைக்காததால் ஆவேசமடைந்த மூதாட்டி அங்கம்மாள், பாட்டில் கிடைக்கும் வரை போராடுவேன் என கதறினார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், ‘சரக்கு பாட்டில் கேட்டு கதறிய மூதாட்டி’ எனப் பரவும் வீடியோ கடந்த 2018-ல் எடுக்கப்பட்டது. இதை தற்போது நடந்த சம்பவம் போல் வாட்சாப் ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.