YouTurn

கலைஞர் கோயிலில் பொய் கணக்கு எழுதினார் என எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியதாகத் தவறாகப் பரவும் நாதகவினர் வீடியோ!

கலைஞர் கோயிலில் பொய் கணக்கு எழுதினார் என எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியதாகத் தவறாகப் பரவும் நாதகவினர் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோவில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி. இதை நான் சொல்லவில்லை, திமுக MP ஜெகத் ரட்சகன் கூறுகிறான். மீண்டும் வேண்டாம் திமுக. சிந்தியுங்கள் மக்களே.


X link

விரிவான விளக்கம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கோயில் பணத்தைக் கொள்ளையடித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசியுள்ளார் எனக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



Archive link 

அந்த வீடியோவில், கருணாநிதி அறநிலையத்துறை ஆணையரைக் கூப்பிட்டு விபூதி, குங்குமம், நாமக்கட்டி வாங்கிய தொகை 3 கோடி எனப் பொய் கணக்கு எழுதச் சொல்லி அப்பணத்தை அவர் எடுத்துக் கொண்டதாக ஒருவர் பேசுகிறார். 

உண்மை என்ன ?

பரவக் கூடிய வீடியோவில் பேசுபவருக்குப் பின்னால் சீமானின் புகைப்படத்துடன் கூடிய பேனரும் நாம் தமிழர் கட்சியின் புலி சின்னமும் இருப்பதைக் காண முடிகிறது. ஜெகத்ரட்சகன் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவர் ஏன் நாம் தமிழர் கட்சி மேடையில் பேச வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது. 



மேலும் அந்த வீடியோவில் ‘எனது ஆசான்’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு தேடியதில், ‘எனது ஆசான்’ என்கிற யூடியூப் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவின் முழுமையான வீடியோ கிடைத்தது. கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் 11வது நிமிடம் 54 வினாடியில் பரவக் கூடிய பகுதி இடம் பெற்றுள்ளது. 



அதன் தலைப்பில் புலவர் கிருஷ்ணகுமார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரை ஜெகத்ரட்சகன் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.



மேலும் கலைஞர் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் போது பொய் கணக்கு எழுதியதாகக் கூறும் தகவல் எங்கு, யார் கூறியது என எந்த தகவலையும் கிருஷ்ணகுமார் மேடையில் குறிப்பிடவில்லை. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகவே உள்ளது. 

முடிவு : 

கலைஞர் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் போது பொய் கணக்கு எழுதியதாக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசி இருப்பதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோவில் இருப்பது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். மேலும் அது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க