YouTurn

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமென அண்ணாமலை சொன்ன பொய்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமென அண்ணாமலை சொன்ன பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டைக் காட்டிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

பரவிய செய்தி

இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. -அண்ணாமலை

Youtube link

விரிவான விளக்கம்

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ”இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. கர்நாடகாவுக்கும் நமக்கும் (தமிழ்நாடு) ரூ.7 வித்தியாசம்” எனக் கூறியுள்ளார். 

         

உண்மை என்ன?

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து பாஜகவினர் பேசிய பல பொய்கள் பற்றிய உண்மைகள் இதற்கு முன்னர் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 


தற்போது தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என அண்ணாமலை சொன்ன தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். பெட்ரோல், டீசல் விலை குறித்துப் பல ஊடகங்களில் தளத்தில் தினமும் பதிவிடுவது வழக்கம். அப்படி மாநிலவாரியாக ‘Live mint’ தளத்தில் உள்ள விலைப்பட்டியலை ஆய்வு செய்தோம். 


தமிழ்நாட்டில் இன்றைய தேதிப்படி (ஜூலை, 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.98. இதே நேரத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மத்தியப் பிரதேசம் (ரூ.106.29), மகாராஷ்டிரா (ரூ.103.44), பீகார் (ரூ.105.68), ராஜஸ்தானில் (ரூ.104.88) தமிழ்நாட்டைக் காட்டிலும் பெட்ரோல் விலை அதிகமாகவே உள்ளது. மேலும் அண்ணாமலை குறிப்பிட்ட கர்நாடகாவில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.102.86 -ஆக உள்ளது.

இதேபோல் கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ.88.94-ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ.92.56-ஆக உள்ளது. தமிழ்நாட்டின் டீசல் விலைதான் இந்தியாவிலேயே அதிகமா என்றால் இல்லை. ஆந்திரா ரூ.96.17; கேரளா ரூ.96.13; தெலங்கானா ரூ.95.65; சத்தீஸ்கர் ரூ.93.20 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் எனத் தவறான தகவலை அண்ணாமலை பேசியுள்ளார். 


மேலும் படிக்கதமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள்!


மேலும் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் காலை உணவுத் திட்டத்தை புதிய கல்விக் கொள்கை மூலம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது எனப் பேசியுள்ளார். 


இதே பொய்யான செய்தியை இதற்கு முன்பும் அண்ணாமலை பேசியுள்ளார்.  காலை உணவு வழங்குவதன் மூலம் கற்றல் திறனை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் கூறுவதாக புதிய கல்விக் கொள்கை-2020ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நீண்டகால திட்டம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், எந்த இடத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்றோ இதற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கும் என்றோ குறிப்புகள் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் காலை உணவு திட்டம் குறித்து இருப்பது வெறும் பரிந்துரை மட்டுமே.


தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக 2024-25 நிதிநிலையில் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து காலை உணவுத் திட்டம் ஒன்றிய அரசு கொண்டுவந்து நிதியளிப்பதுபோல் அண்ணாமலை சொன்ன தகவல் பொய்யானது என்பதை உறுதி செய்யமுடிகிறது. 

முடிவு: 


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் என அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க