YouTurn

தமிழர்களை இழிவுப்படுத்தி வடநாட்டவர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

தமிழர்களை இழிவுப்படுத்தி வடநாட்டவர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்கின்ற அவலமான காலகட்டத்தில் தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றுபவர்கள் வடநாட்டவர்தான். அவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்யவேண்டும். ஐ- வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏனியர்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களை தாக்கி கொலை செய்வதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பப்பட்ட வதந்திகளால் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் உருவாகியது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வதந்திகளை பீகார் பாஜக தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பரப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பீகார் தொழிலாளியை கொன்ற ஜார்கண்ட் இளைஞர்.. தமிழ்நாடு மீது பொய் பரப்பிய வடஇந்திய ஊடகங்கள் !

இந்நிலையில், தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்பதாகவும், தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றும் வடநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ? 

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியது குறித்து ஜூனியர் விகடனின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், " வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க! வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Facebook link 

தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களில் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்! - வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏ! " என்ற செய்தியே மார்ச் 4ம் தேதி நியூஸ் கார்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.



பாஜக வானதி சீனிவாசன் பற்றி வெளியான மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகின்றனர்.



Facebook link 

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு போலியானது என வானதி சீனிவாசனும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க : அண்ணாமலைப் படத்தை புறக்கணித்து வானதி சீனிவாசனுக்கு போஸ்டர் அடித்ததாக திமுகவினர் வதந்தி !

மேலும் படிக்க : திருக்காட்டுப்பள்ளியை மைக்கேல்பட்டி என மதம் மாற்றியதாக வதந்தியை பதிவிட்டு நீக்கிய பாஜக வானதி !

இதற்கு முன்பாக, வானதி சீனிவாசன் பற்றி பரவிய வதந்திகள் குறித்தும், அவர் பரப்பிய வதந்திகள் குறித்தும் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்பதாகவும், வடநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்யவேண்டும் எனக் கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க