YouTurn

தமிழ்நாட்டின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்ததாக அதிமுகவினர் பரப்பும் பொய் !

தமிழ்நாட்டின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்ததாக அதிமுகவினர் பரப்பும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எல். ஜெயசுதா அவர்கள் நியமனம் ! இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிறுவிய கழகமாம் அஇஅதிமுக வசம் வந்துள்ளது. 

X post link | Archive link 

விரிவான விளக்கம்

ண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தரப்பில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை 75ல் இருந்து 82 ஆக உயர்த்தியும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்று(செப் 27) வெளியானது.

அதில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் எல்.ஜெயசுதா அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளரை அதிமுக நியமித்து உள்ளதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.





உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் பெண் மாவட்டச் செயலாளர்கள் குறித்து தேடுகையில், 1999ல் நடந்த திமுகவின் உட்கட்சி தேர்தலில் கரூர் எம்எல்ஏவாக இருந்த வாசுகி முருகேசன் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 2009ம் ஆண்டு வரை மாவட்டச் செயலாளராக இருந்தார். 2009ல் கார் விபத்தில் உயிரிழந்தார்.



இதேபோல், கோவை திமுக மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்த பொங்கலூர் பழனிசாமியின் மனைவி விஜி பழனிசாமியும் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.



தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக உள்ள கீதா ஜீவன் அவர்கள் தூத்துக்குடி திமுகவின் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

இதேபோல், கடந்த ஜூலை மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக வேல். பழனியம்மா என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இப்படி அதிமுகவிற்கு முன்பாகவே திமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளில் பெண் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளதாக நியூஸ் 18 தமிழ் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுகவினர் பரப்பும் தகவல் தவறானது. இதற்கு முன்பாக, திமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளில் பெண் மாவட்டச் செயலாளகள்ர் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க