யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அமிர்த நீரான கோமியம் வழங்குவோம் என்று பாஜக மூத்ததலைவர் தமிழிசை கூறியதாக தமிழ் ஜனம் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
பாஐகவுக்கு ஓட்டு போட்டா
இனி ரேஷன் கடையில்
மாட்டு சாணியும்
கோமியமும்
கிடைக்குமாம்.
😂😂😂#BJPFailsIndia #தமிழிசை pic.twitter.com/BjgnKG89RN
உண்மை என்ன?
பரவி வரும் இந்த கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் கூறினாரா அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு தமிழிசை இப்படி கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
மாறாக கோமியத்தை அமிர்த நீர் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஜனவரி 21, 2025 அன்று புதிய தலைமுறை ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் “ஒருங்கிணைந்த மருத்துவத்தின்படி கோமியத்தை அமிர்த நீர் என்று சொல்வார்கள். அது 80 வகையான நோய்களை கட்டுப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அவர் கூறியதாக அதில் எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து பரவி வரும் நியூஸ் கார்ட்ல் தமிழ் ஜனம் என்று குறிப்பிட்டிருந்ததால், தமிழ் ஜனம் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். இது குறித்தான எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை பார்க்கமுடிந்தது.
இதை மேலும் உறுதி செய்ய, தமிழ் ஜனம் ஊடகத்தை தொடர்புக்கொண்டு கேட்ட போது, இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தினர். எனவே இது போலியான நியூஸ் கார்ட் என்பது உறுதியானது.
இதே போல் சமூகவலத்தளங்களில் பரவிய போலி நியூஸ் கார்ட் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க :
சீமானை பார்த்து தான் காமராஜர் மதிய உணவை திட்டத்தை தொடங்கியதாக எடிட் செய்து பரவும் நியூஸ் கார்ட்!
முடிவு:
நம் தேடலில் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெரியவந்தது. தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
