YouTurn

சென்னை உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக பரவுவது பழைய செய்தி!

சென்னை உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக பரவுவது பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படம், கடந்த 2017ல் சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ​ ‘ஆயிரம் விளக்கு’ பகுதி அருகே பள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.

பரவிய செய்தி

DMK 2.0 

#SingaraPotholeCHENNAI

X Link | Archived Link

விரிவான விளக்கம்

திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பேருந்து மற்றும் கார் அந்த பள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ளது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது BBC Tamil ஊடகத்தில், “சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: சீரமைப்பு பணிகள் நாளை மாலை முடிவைடையும்” என்ற தலைப்பில் இது குறித்து ஏப்ரல் 09, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கின என்றும், எனினும், காரில் சென்ற மருத்துவரும், பஸ் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் The Hindu ஊடகத்தில்Major cave-in on Chennai’s Anna Salai” என்ற தலைப்பில் இது குறித்து ஏப்ரல் 10, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்தது. சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ​​ஆயிரம் விளக்கு பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த முப்பத்தைந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் இந்தியன் எக்ஸ்பிரஸ், சமயம் தமிழ் போன்ற ஊடகங்களில் இது குறித்து 2017ஆம் ஆண்டே செய்தி வெளியாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. 

image.png


முடிவு: 

எனவே பரவி வரும் புகைப்படம், கடந்த 2017ல் சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ​ ‘ஆயிரம் விளக்கு’ பகுதி அருகே பள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது. இதை தற்போது நடந்தது போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க