யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் இது. இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் அலப்பறை. எஸ்பி காரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும். திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவரை மற்ற மாணவர்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்துவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் அப்பதிவில் “தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் Ragging அலப்பறை. காவல்துறைக்கும் அம்மாணவனின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியும் வரை இந்த வீடியோவை பகிருங்கள். திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“TV5 News“ ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோவைக் குறிப்பிட்டு, இது ஆந்திராவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 09 அன்று பதிவு செய்திருந்தனர்.
#Breaking :
పల్నాడు జిల్లా
దాచేపల్లి ప్రభుత్వ జూనియర్ కాలేజీ లో ర్యాగింగ్ కలకలం
కాలేజీలో చదివే ఇద్దరు విద్యార్థులను దారుణంగా కొడుతున్న తోటి విద్యార్థులు
ఐదుగురు కలిసి ఒక విద్యార్థిని అతి కిరాతంగా కొట్టిన వైనం
బీసీ హాస్టల్ కి తీసుకువెళ్లి కొట్టి ,కరెంట్ పెట్టి చంపుతామని… pic.twitter.com/2cFpJ4GHuV
இதே போன்று, “India Today“ பக்கத்திலும் பரவி வரும் வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “ஆந்திரப் பிரதேச மாநிலம், பாலநாடுவில் உள்ள தாச்சேபள்ளி அரசு இளநிலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை குடிபோதையில் இருந்த சீனியர் மாணவர்கள் அடித்து, மின்சாரம் தாக்கி, வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்“ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு இளநிலை கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் இது. இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: இஸ்ரேலிய கல்லூரி பெண், இந்திய ஜேஎன்யு கல்லூரி ஆணின் புகைப்படம் என இந்து மக்கள் கட்சி பரப்பும் பொய்!
மேலும் படிக்க: சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் எனப் பரவும் பழைய வீடியோ!
முடிவு:
நம் தேடலில், ஆந்திராவில் உள்ள கல்லூரியில் நடந்த சம்பவத்தை தமிழ்நாடு என்று கூறி தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.