YouTurn

மாணவர் ஆசிரியரை தாக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா? பொய்யை பரப்பும் அதிமுக!

மாணவர் ஆசிரியரை தாக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா? பொய்யை பரப்பும் அதிமுக!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் வீரவள்ளி என்னும் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்ததாகும்.

பரவிய செய்தி

‘ஒழுக்கமற்ற மாணவர் சமுதாயம் பாதுகாப்பில்லாத ஆசிரியர் சமூகம்’!

மொத்தமா முடிச்சு விட்ட ஸ்டாலின்.


Facebook Link

விரிவான விளக்கம்

பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவர் ஒருவன் நடுத்தர வயதுடைய  ஆசிரியர் ஒருவரை தாக்குகிறான். ஆசிரியை ஒருவரும் சக மாணவர்களும் அந்த மாணவனை தடுக்கிறார்கள். பள்ளி வகுப்பறையில் நடக்கும் இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் இது நடந்ததாக அதிமுக இணைய அணி பரப்பி வருகிறது. 



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். ’News 18 தமிழ்நாடு’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.


image.png


மார்ச் 05ஆம் தேதி வெளியாகியுள்ள அந்த செய்தியின் படி, இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் வீரவள்ளி என்னுமிடத்தில் உள்ள ஜில்லா பரிசத் உயர்நிலைப்பள்ளியில் நடந்ததாக தெரிய வருகிறது. அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக பள்ளிக்கு வராததை அந்த வகுப்பாசிரியர் கண்டித்துள்ளார். இதனால், அந்த மாணவனுக்கும் வகுப்பு ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவன் திடீரென்று எழுந்து வகுப்பாசிரியர் நெஞ்சில் ஓங்கி குத்தியுள்ளார். மேலும் அந்த மாணவன் ஆசிரியரை தாக்காமல் சக மாணவர்கள் அவனை தடுத்துள்ளார்கள். 



மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் வீரவள்ளி என்னும் பகுதியில் உள்ள பள்ளியில் நடந்துள்ளதை அறிய முடிகிறது.


முடிவு:


ஆந்திராவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக அதிமுக இணைய அணி தவறான தகவலை பரப்பிவருகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க