யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' நர்மதை ஆற்றின் கரையில், 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலையை, சர்தார் வல்லபாய் பட்டேலின் 143ஆவது பிறந்த தினமான 2018 அக்டோபர் 31ஆம் தேதி, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை கட்டுவதற்காக சுமார் 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தச் சிலை எழுப்பப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவந்த பழங்குடி மக்கள் அகற்றப்பட்டதால் அங்கே பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் 3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
பீசேபீ சாதனை
3,000 கோடி சிலையில் அடியில் விரிசல்கள். விழுந்தால் 3000 கோடி அம்போ😫 pic.twitter.com/wIF26xVQNa
உண்மை என்ன ?
பரவிவரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது தெரியவந்தது.
Danish மொழியில் இயங்கக் கூடிய EkstraBladet என்ற இணையதளப்பக்கத்தில் அக்டோபர் 26, 2018 அன்று செய்தி ஒன்று பதிவு செய்திருப்பதை கவனித்தோம். அந்த செய்தியில் பரவக்கூடிய புகைப்படம் இருப்பதை பார்க்கமுடிகிறது.
இந்த செய்தியினை Google Translate உதவியுடன் மொழிபெயர்த்ததில், சிலையினைக் குறித்தும், கட்டுமானப் பணியின்போதும் எடுக்கப்பட்டப் சில புகைப்படங்களையும் காணமுடிந்தது.
மேலும், இந்திய அரசின் PIB Fact Check அவர்களது எக்ஸ் பக்கத்தில் செப்டம்பர் 9,2024 அன்று பரவக்கூடிய புகைப்படத்தை குறிப்பிட்டு இது தவறான தகவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
सोशल मीडिया पर एक फोटो शेयर कर यह दावा किया जा रहा है कि दुनिया की सबसे ऊंची प्रतिमा, स्टैच्यू ऑफ यूनिटी में दरारें आनी शुरू हो गई हैं और यह कभी भी गिर सकती है।#PIBFactCheck
❌ यह दावा #फर्जी है।
✅ यह फोटो वर्ष 2018 में स्टैच्यू ऑफ यूनिटी के निर्माण के दौरान की है pic.twitter.com/RHpYc2Aykj
இவற்றிலிருந்து பரவக்கூடியப் புகைப்படம் 2018ஆம் ஆண்டு சர்தார் வல்லப்பாய் பட்டேலின் சிலை கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறியமுடிகியது
முடிவு:
நம் தேடலில் 3,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சிலையில் விரிசல் இருப்பதாகப் பரவும் புகைபடத்தகவல் தவறானது. உண்மையில் இது 2018ஆம் ஆண்டு சிலை கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
