யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டது.
பரவிய செய்தி
கரூர் அரசு மருத்துவமனையில் சரியான உபகரணங்களே கிடையாதுனு ரிப்போர்ட் வருது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஏன் பக்கத்துல இருக்கிற பிரைவேட் ஹாஸ்பிட்டல எல்லாம் சேர்க்கல.
- ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர்.

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் தவெக கட்சி ரீதியான கூட்டங்கள் எதுவும் நடத்தப்படமால் இருந்த நிலையில், தற்போது நவம்பர் 5ஆம் தேதி தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, ‘கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்காமல் சரியான உபகரணங்கள் இல்லாத கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக’ கூறுயுள்ளார்.
உண்மை என்ன?
கரூர் கூட்ட நெர்சல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த செய்திகளை தேடியபோது, ‘News18 Tamil Nadu’ ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி அன்று வெளியிட்டப்பட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதில், ’அமராவதி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட 32 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தேடியதில் ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியின்படி, ‘மொத்தமாக 111 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும்; அக்ஷயா, அப்பலோ, அமராவதி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக’ தெரியவருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டது தெரியவருகிறது.
முடிவு:
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தவறான தகவலை மேடையில் கூறுகிறார்.