YouTurn

தமிழில் தான் இனி கையெழுத்து போட வேண்டும்.. பிரதமர் சொல்லியே தமிழ்நாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகப் பரவும் பொய்கள்!

தமிழில் தான் இனி கையெழுத்து போட வேண்டும்.. பிரதமர் சொல்லியே தமிழ்நாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகப் பரவும் பொய்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தக் கோரி அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சொன்னதையடுத்தே, தமிழ்நாட்டில் இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறி பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை, செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தக் கோரி அரசாணை ஒன்று ஏப்ரல் 14, 2025 அன்று வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும், சுற்றாணைக் குறிப்புகள், வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கவேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் உட்பட பல அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி சொன்னதையடுத்தே, தமிழ்நாட்டில் இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறி பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன?


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கடந்த 2021 லேயே இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. 


Tami Iindian Express”  ஊடகப் பக்கத்தில் கடந்த 2021 டிசம்பர் 10 அன்று இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “தமிழக முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை (ஜிஓ) வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணை 1978 மற்றும் 1998ல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளையும், 1997ல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது “ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 



மேலும் இது குறித்து  கடந்த 2021-ல் “தமிழ் முரசு“ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “முன்­னெ­ழுத்து, கையெ­ழுத்து ஆகி­ய­வற்­றைத் தமி­ழில் எழுத வேண்­டும் என்று 1978 மற்றும் 1998ல் பிறப்­பிக்கப் பட்ட இரு உத்­த­ர­வு­களும் சரி­வ­ரப் பின்­பற்­றப்­ப­ட­வில்லை, எனவே மீண்டும் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது “ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 


இதன் மூலம்  1978 ஆம் ஆண்டிலும், பின்­னர் சுமார் இரு­பது ஆண்­டு­கள் கழித்து 1998 செப்­டம்­ப­ரில் தந்தை, தாய் மற்­றும் ஊர் பெயர்­களை இனிஷியலாக எழுதுவோர் அத­னைத் தமி­ழி­லேயே எழுத வேண்­டும் என்று தமிழ்நாட்டில் அப்­போது ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த அரசு உத்­த­ர­விட்­டது என்பதையும், இந்த இரு உத்­த­ர­வு­களும் சரி­வ­ரப் பின்­பற்­றப்­ப­டாததால் மீண்டும் கடந்த 2021-ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஏப்ரல் 14, 2025 அன்று மீண்டும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது. 


முடிவு:


நம் தேடலில், தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி சொன்னதையடுத்தே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசாணை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.