YouTurn

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லையா? சீமான் சொல்லும் பொய்!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லையா? சீமான் சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலே தவெக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

பரவிய செய்தி

”நான் தேர்தல் பரப்புரையில் 5 நிமிடங்கள் அதிகமாக பேசிவிட்டேன் என்பதற்காக என் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போனாலும் ஒரு வழக்கும் (FIR) பதியப்படவில்லை” - சீமான். 


YouTube Link 

விரிவான விளக்கம்

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதையோட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த மார்ச் 28ஆம் தேதி ஆவடி தொகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட 5 நிமிடங்கள் அதிகமாக பேசிவிட்டேன் என்பதற்காக என் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போனாலும் கூட அங்கு ஒரு வழக்கும் (FIR) பதியப்படவில்லை” என்ற கூறினார்.



உண்மை என்ன? 


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக FIR-கள் பதியப்பட்டது குறித்த செய்திகளை தேடினோம். ‘The Hindu’ செய்தித்தளத்தில் 2025 அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது.


அதில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, கரூர் டவுன் போலீஸார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் கூட்டத்திற்கு வருவது வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டதாகவும், மக்கள் பல மணிநேரமாக தண்ணீர் மருத்துவ வசதி எதுவுமில்லாமல் வெயிலும் கூட்டத்திலும் நின்றதால் களைப்பு ஏற்பட்டதாகவும்  FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் C.T.நிர்மல் குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலே தவெக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிகிறது.


முடிவு:


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெகவினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று சீமான் பொய்யான தகவலை பேசிவருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க