யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாடு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் ஆக. 21 அன்று நடைபெற்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர், விஜய் மதுரையில் நடத்திய மாநாடு குறித்து நிருபர்களிடம் பேச மறுத்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
நிரூபர் :- மதுரை மாநாடு பத்தி சொல்லுங்க
SAC :- மாநாடு பத்தி இவர் கிட்ட கேளுங்க 🤣🤣
விஜய் அப்பன் கால்ல விழுந்து மதுரை மாநாட்டுக்கு கூட்டிட்டு வந்து இருப்பான் போல pic.twitter.com/9sZx2jT4Bi
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மதுரை மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அவர் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. நல்லா இருந்தது மாநாடு. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்ல கூட்டம். என்னோட ஆசீர்வாதம் எப்பவுமே இருக்கும்” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
எனவே இதைத் தொடர்ந்து பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வு செய்ததில், இது கடந்த ஆண்டு தவெக சார்பில் நடைபெற்ற முதல் மாநாட்டோடு தொடர்புடைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இது தொடர்பாக, சமயம் மற்றும் Tamil.filmi beat உள்ளிட்ட ஊடகங்களில் கடந்த ஆண்டு செய்தி வெளியிடப்பட்டிருந்ததையும் தெளிவாகக் காண முடிகிறது.
இதன்மூலம், கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாடு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டோடு தொடர்புடைய வீடியோவை தற்போது தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.