யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கோவில் திருவிழாவில் மதுபோதையில் இருப்பதாக நடிகர் ஸ்ரீகுமார் கணேஷின் படப்பிடிப்பு புகைப்படத்தை தவறாக பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
கோவில் திருவிழா ஒன்றில் நடக்க முடியாதபடி போதையில் தள்ளாடி கீழே விழுந்த நாய்டம்ளர் இடும்பாவனம் கார்த்திக் இவனுங்கதான் டாஸ்மாக்க பத்தி நாய் மாதிரி ஊரெல்லாம் குரைப்பானுங்க.
விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கோயில் திருவிழாவின்போது மது போதையில் தள்ளாடி கீழே விழுந்துள்ளார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
கோவில் திருவிழா ஒன்றில் நடக்க முடியாதபடி போதையில் தள்ளாடி கீழே விழுந்த நாய்டம்ளர் இடும்பாவனம் கார்த்திக் இவனுங்கதான் டாஸ்மாக்க பத்தி நாய் மாதிரி ஊரெல்லாம் குரைப்பானுங்க. pic.twitter.com/thzGnL84Q1
— Ex_MLA_Candidate (@Tamilithayan) August 10, 2024
உண்மை என்ன?
பரவக்கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், கடந்த 10ஆம் தேதி ‘ABP நாடு’ இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருப்பதைக் காணமுடிந்தது. அக்கட்டுரையில் பரவக்கூடிய புகைப்படம் உள்ளது.

ஸ்ரீகுமார் கணேஷ், சாந்தினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் ’வானத்தை போல’ என்ற நாடகம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரதில் நடிக்கும் ஸ்ரீகுமார் கணேஷை பொதுமக்கள் மிதித்துவிட்டுச் செல்வது போல் ஒரு காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.
அக்காட்சியின் ஒத்திகை behind the scenes-ஆக வீடியோ எடுத்து, அதனை ஸ்ரீகுமார் கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பற்றி ABP நாடு வெளியிட்ட செய்தியில் பயன்படுத்தப்பட்ட thumbnail-ஐ எடுத்து இடும்பாவனம் கார்த்திக் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடி விழுந்ததாகப் பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

முடிவு:
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கோயில் திருவிழாவில் மதுபோதையில் தள்ளாடி விழுந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. வீடியோவில் இருப்பது நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ். இந்த புகைப்படம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.