யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக தரப்பில் அனுமதி கேட்டது "லைட் ஹவுஸ் ரவுண்டானா". பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பேருந்து நிலைய ரவுண்டானாவை வழங்கியுள்ளனர் என்று கூறி மதிவாணன் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை திரித்துப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
“கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அனுமதி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்”

விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து இரவோடு இரவாக உயிரிழந்த உடல்களும் அனைத்து பிரதே பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானிக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை வழங்கிவிட்டு, தவெக தரப்பில் அதே பகுதியில் அனுமதி கேட்டப்போது கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக மதிவாணன் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்பு வருகின்றனர்.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் இந்த செய்தி குறித்து ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது செப்டம்பர் 25 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோருதல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றை காணமுடிந்தது.

அதில் ”எங்கள் கழகத் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக கரூருக்கு வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார். லைட் ஹவுஸ் ரவுண்டானா இடத்தை 23.09.25 அன்று பொறியாளரை வைத்து அளவீடு செய்ததில் 1,20,000 சதுரடி காலியிடமாக உள்ளது. இதில் 60 ஆயிரம் நபர்கள் வரை நின்று பார்வையிட வாய்ப்பு உள்ளது. நாங்கள் இக்கூட்டத்திற்கு எதிர் பார்க்கப்படும் நபர்கள் 10,000 பேர்வரை ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.”
எனவே, தவெக கட்சிக்கு கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அனுமதி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், தவெக தரப்பில் அனுமதி கேட்டது "லைட் ஹவுஸ் ரவுண்டானா". பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பேருந்து நிலைய ரவுண்டானாவை வழங்கியுள்ளனர் என்று கூறி மதிவாணன் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை திரித்துப் பரப்பி வருகின்றனர்.