யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செப்டம்பர் 28 அன்று , கரூர் கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர் குறுகலான இடம் என்று குறிப்பிட்டது உழவர் சந்தை மற்றும் ரவுண்டானா பகுதிகளை தான்.
பரவிய செய்தி
So many truth hidden
Took little time to come out but happy that its atleast coming out now with clear cut evidence

விரிவான விளக்கம்
தந்தி டிவி ஊடகத்தின் விவாத நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அரசியல் விமர்சகர் காமேஷ், வேலுசாமிபுரம், 500 காவலர்களைக் கூட நிறுத்த முடியாத அளவிற்கு குறுகலான இடம் என்று கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பேசியுள்ளார்.
So many truth hidden 🙏🙏
Took little time to come out but happy that its atleast coming out now with clear cut evidence 👏😂 pic.twitter.com/x4U6KPewZS
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிய, கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அளித்த பேட்டி கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது சன் நியூஸ் ஊடகத்தில் ”LIVE : Karur ADGP Press meet | TVK Vijay campaign Tragedy | Karur Stampede” என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 28 அன்று முழு பேட்டியும் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அவர், ”தவெகவினர் கொடுத்த மனுவில் லைட்ஹவுஸ் ரவுன்டானாவில் அனுமதி கேட்டனர். அது மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் அந்த இடம் கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு உழவர் சந்தை மைதானத்திற்கு அனுமதி கேட்டனர். அதுவும் குறுகலான பகுதி. இதுபோன்ற கூட்டத்தை சமாளிப்பது கடினம். போலீசார் பரிந்துரையின் பேரில், தவெகவினர் மனு கொடுத்து, வேலுசாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என்றே கூறியிருந்தார்.
இது குறித்து ETV Bharat Tamil ஊடகத்திலும் “தவெக கேட்ட இடத்தை காவல்துறை கொடுக்காதது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் ”செப்டம்பர் 23 அன்று தவெக சார்பில் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அந்த இடத்தின் ஒருபுறம் பெட்ரோல் பங்க் மற்றும் மறுபுறம் ஆற்றுப்பாலம் இருந்தது. இதனால், அந்த பகுதியில் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி வழங்கவில்லை. மறுநாளே, உழவர் சந்தை பகுதியில் அனுமதி கேட்கப்பட்டது. அந்த இடமும் குறுகலான இடம். பெருந்திரள் மக்களை அங்கு கூட்டுவது சாத்தியமில்லாததால், அந்த இடத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது” என்று அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில் கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , குறுகலான இடம் என்று குறிப்பிட்டது உழவர் சந்தை மற்றும் ரவுண்டானா பகுதிகளை தான். இதை வேலுசாமிபுரம், 500 காவலர்களைக் கூட நிறுத்த முடியாத அளவிற்கு குறுகலான இடம் என்று அவர் கூறியதாகக் கூறி சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.