யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒன்றிய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியான செய்தி.
பரவிய செய்தி
ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
Link: https://gvd.jjssf.xyz/15skiygmq/c535892ba59465a344f8d4412b?_t1765898988623&p=w

விரிவான விளக்கம்
ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் 2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் ரூ.30,000 வழங்கவுள்ளது. எனவே உடனே கீழே உள்ள இணைப்பில் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் என்று குறிப்பிட்டு செய்தி ஒன்று வாட்சாப் ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ Press Information Bureau (PIB) பக்கத்தில் ஆய்வு செய்ததில் அது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தால் செய்தி ஊடகங்களில், இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டிருக்கும். ஆனால் ஊடகங்களிலும் இது குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
மேலும் வாட்சாப் ஊடகத்தில் இது குறித்து பரவி வரும் இணையதளப் பக்கத்தை ஆய்வு செய்ததில் அதுவும் செயல்பாட்டில் இல்லை.
இதற்கு முன்பும் இதே போன்று பல செய்திகள், நிதியுதவி மற்றும் பரிசுத்திட்டம் என்று குறிப்பிட்டு போலியாக பரவின. அப்போதே இது குறித்து நம் பக்கத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி !
மேலும் படிக்க: காதலர் தின பரிசென பரவும் மோசடி லிங்க்.. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது ?
மேலும் படிக்க: தொடரும் மோசடிகள் : ஆதார் பயோமெட்ரிக்ஸைப் பாதுகாப்பது எப்படி? ஏன் அவசியம் ?
மேலும் படிக்க: புதிய சைபர்கிரைம் மோசடி: உங்கள் செல்போன் அழைப்புகளை யாருக்கும் பகிர வேண்டாம்..!
முடிவு:
நம் தேடலில், ஒன்றிய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கவுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.