யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு பரவி வரும் செய்திகள் போலியானவை. தேர்தல் ஆணையம் இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் புகைப்படத்தில் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் மார்ச் 20 அன்றும், வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் மார்ச் 27 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்றும் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் மற்றொரு நியூஸ் கார்டில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 09 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் முதல் நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என்பதை உறுதி செய்ய முடிந்தது.
#BREAKING | மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!#SunNews | #ParliamentElection2024 https://t.co/bnhH9yqBD3 pic.twitter.com/XBFGSDCNE9
இதே போன்று தமிழ்நாட்டில் ஏப்ரல் 09 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டு பரவும் மற்றொரு நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்ததில், அது போலியான செய்தி என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் அறிவிக்க வில்லை.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு பரவி வரும் செய்திகள் வதந்தியே என்பது தெளிவாகிறது.