யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“சோனி ஜி” என்ற அந்த பயணி தனது யூடியூப் பக்கத்தில், ஆந்திராவில் ஏற்பட்ட மோசமான அனுபவம் என்று குறிப்பிட்டு ஜனவரி 24 அன்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… உதவுங்கள்… உதவுங்கள். தமிழ்நாட்டில், வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்து யாத்திரிகர் மீது நடந்த கொள்ளைச் சம்பவம்—கேமராவில் பதிவானது. அவர் தொடர்ந்து உதவி கேட்டு அலறினார்; ஆனால் யாரும் உதவ வரவில்லை.
இது காங்கிரஸ் ஆளும் புதிய தமிழ்நாடா? இதே போன்ற சம்பவம் வட இந்தியாவில் ஒரு தமிழருக்கு நடந்திருந்தால் என்ன ஆகும்?
சோனி ஜி கன்னியாகுமரியில் இருந்து இலங்கை வரை இந்து யாத்திரையாகப் பயணம் செய்து வரும் ஒரு blogger. அவர் உதவி கேட்ட அதே biker தான் அவரை கொள்ளையடித்துள்ளார். வீடியோ க்ரெடிட்: Soni Travelers.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில், வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்து யாத்திரிகர் தாக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் உள்ள நபர்கள், ஒரு இளைஞரை தாக்குவதையும், அந்த இளைஞர் உதவி வேண்டும் என்று கத்துவதையும் வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.
बचाओ बचाओ हेल्प me help me 🙏
तमिलनाडु में उत्तर भारतीय हिंदू दर्शनार्थी के साथ ऑन कैमरा लूट कांड . मदद के लिए चिल्लाते रहे किसी ने मदद नहीं की .
ये नया कांग्रेस का तमिलनाडु है अगर ऐसा कुछ तमिल के साथ उत्तर भारत में होता तो ? https://t.co/tcH9Tvxf0p
மேலும் சிலர் இதே வீடியோவைக் குறிப்பிட்டு, “ஹிந்தி பேச தெரியாத காரணத்தினால் வட இந்தியாவில், தெலுங்கு பேசும் இளைஞர் தாக்கப்பட்டார்” என்றும் கூறி சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
This nation is so badly divided, we don't need any external enemies.
A telugu vlogger who travelled more than 20 countries was attacked somewhere in North India for not speaking in Hindi. His money was stolen and he was beaten up by the so called Nationalist goons. pic.twitter.com/TsySdNrFMa
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“SoniTraveling” என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி ஜனவரி 24, 2026 அன்று “தென்னிந்தியாவிற்கு வராதீர்கள் | ஆந்திராவில் ஏற்பட்ட மோசமான அனுபவம் | தென்னிந்திய தாக்குதல்“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
வீடியோவின் மூலம், “சோனி ஜி” என்ற பயணி கடந்த மாதம் ஆந்திராவிற்கு சென்ற போது நடைபெற்ற சம்பவம் இது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
இந்நிலையில் வடஇந்தியப் பயணி ஒருவர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். இதே போன்று இந்தி தெரியாத காரணத்தினால் தெலுங்கு பேசும் இளைஞர் தாக்கப்பட்டார் என்று கூறி பரவி வரும் செய்திகளும் தவறானவையே.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட வட இந்தியப் பயணி எனப் பரவும் வீடியோ, ஆந்திராவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.