YouTurn

அமெரிக்கா சென்ற ராகுல் காந்தியை அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததாகப் பரவும் போலி ட்வீட் !

அமெரிக்கா சென்ற ராகுல் காந்தியை அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததாகப் பரவும் போலி ட்வீட் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராகுல் காந்தியை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம். ஆனால் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டுள்ளது. அதற்காக எப்போது வேண்டுமானாலும் திறந்த வெளியில் மலம் கழிக்க என் நாட்டிற்கு வரலாம் என்று அர்த்தம் கிடையாது. - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

கடந்த மே 30 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பத்து நாள் அமெரிக்க பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் அரசியல் குறித்தும், இந்திய ஜனநாயகம் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளதாகக் கூறி அவருடைய ட்வீட் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



Archive Link:



Archive Link

அப்பதிவில், "ராகுல் காந்தியை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம். ஆனால் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டுள்ளது. அதற்காக எப்போது வேண்டுமானாலும் திறந்த வெளியில் மலம் கழிக்க என் நாட்டிற்கு வரலாம் என்று அர்த்தம் கிடையாது" என்றுள்ளது.

உண்மை என்ன ?

பரவி வரும் ட்வீட் குறித்து அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த மே 31 அன்று அவர் பதிவிட்ட 4  பதிவுகளில், சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற பதிவு எதுவும் காணப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் அவர் ராகுல் காந்தியைப் பற்றி ட்வீட் செய்திருந்தால் அல்லது அதை நீக்கியிருந்தால் ஊடகங்கள் அது குறித்து செய்திகள் வெளியிட்டிருக்கும். ஆனால் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது.



மேலும் அதிபர் பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் லிங்கை உள்ளீடு செய்து Wayback Machine -இல் தேடியபோது, ​​அத்தகைய ட்வீட் எதுவும் காப்பகப்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய முடிந்தது. மேலும் மே 30, 31 மற்றும் ஜூன் 1 போன்ற தேதிகளிலும் பதிவுகளை சரிபார்த்ததில், இந்தத் தேதிகளிலும் இதுபோன்ற பதிவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது.



அவர் பதிவை நீக்கிவிட்டாரா என்பது குறித்து Social Blade-ஐப் பயன்படுத்தி அதிபர் ஜோ பைடனின் பதிவுகளை சரிபார்த்ததில், அந்த தேதியில் எந்த ட்வீட்டும் நீக்கப்படவில்லை என்பதைக் கண்டறிய முடிந்தது.



இதன் மூலம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ட்வீட் பதிவு, எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் படிக்க : 2001ல் அமெரிக்காவில் ராகுல் காந்தி போதைப்பொருள் வைத்திருந்ததால் கைது எனப் பரவும் போலிச் செய்தி !

மேலும் படிக்க : ராகுல் காந்தி வெளிநாடுகளில் ‘ராகுல் ராஜீவ் பெஃரோஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் படம் !

முடிவு:

நம் தேடலில், அமெரிக்கா சென்ற ராகுல் காந்தியை அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததாகப் பரவி வரும் ட்வீட் பதிவு போலியானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க