YouTurn

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட குவாரி என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட குவாரி என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றின் பழைய புகைப்படமாகும்.

பரவிய செய்தி

திராவிட மாடல் ஆட்சியில் தோண்டப்பட்ட கல்குவாரி… 


image.png


X Link / Archive Link


விரிவான விளக்கம்

மரங்கள் நிறைந்திருக்கும் காட்டிற்கு நடுவில் தோண்டப்பட்டிருக்கும் கல் குவாரி ஒன்றின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘இந்த கல்குவாரி தமிழ்நாட்டில் இருப்பதாகவும், இது கடந்த திமுக ஆட்சியில் தோண்டப்பட்டது’ என்றும் தவெக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது.


image.png


2019 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகமான குவாரிகள் இருப்பதால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் குன்னத்துநாடு, மூவாற்றுப்புழா ஆகிய தாலுகாக்களில் அதிகமான குவாரிகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, இந்த புகைப்படத்தில் இருக்கும் கல்குவாரி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது என்பது தெரியவருகிறது. 


முடிவு:


கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கல்குவாரி ஒன்றின் பழைய புகைப்படத்தை திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட குவாரி என்று தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க