YouTurn

‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ என்று பரவும் பஞ்சாப் வீடியோ!

‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ என்று பரவும் பஞ்சாப் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ எனப் பரவும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள வாகனத்தின் பதிவு எண் மூலம் உறுதி செய்ய முடிகிறது. மேலும் அங்கிருப்பவர்களும் பஞ்சாபிகள் அணியும் தலைப்பாகைகளுடன் இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.

பரவிய செய்தி

திராவிடமே....

சோறுபோடும் பயிரை அழித்து சிப்காட் தேவையா??

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சிப்காட்டிற்காக காவல்துறை பாதுகாப்புடன்  விளை நிலங்கள் புல்டோசர் வைத்து அழிக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ குறித்து ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படியான எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை. 


இதையடுத்து பரவி வரும் வீடியோவை கூர்ந்து கவனித்தால், சரியாக 0:15 நிமிடத்தில் ஒரு கார் இருப்பதை பார்க்கமுடிந்தது. அந்த காரில், PB 11 AH 0222 என்ற பதிவு எண் இருந்ததை தெளிவாக பார்க்கமுடிந்தது. இது பஞ்சாப் மாநிலத்தின் பதிவு எண்ணாகும். 


அதே போல் அந்த காருக்கு முன்பு சில நபர்கள் நிற்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அவர்கள் பஞ்சாபிகள் அணியும் தலைப்பாகைகளுடன் இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. இதிலிருந்து இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிச் செய்ய முடிந்தது. 


முடிவு: 

எனவே, ‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ எனப் பரவும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சிப்காட்டிற்காக காவல்துறை பாதுகாப்புடன்  விளை நிலங்கள் புல்டோசர் வைத்து அழிக்கப்படுவதாக தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க